தமிழ் - சில தகவல்கள் - 01
Table of Contents
பண்டைய இலக்கியத் தமிழர்களின் கொடைகள்
1. முல்லைக்குத் தேர் - பாரி
2. இரவலர்க்குக் குதிரை - காரி
3. கூத்தர்க்கு நாடு - ஓரி
4. மயிலுக்கு போர்வை - பேகன்
5. வந்தவர்களுக்கு ஊர் - ஆய்
6. நண்பன் இல்லத்திற்கு பொருள் - நள்ளி
7. அவ்வைக்கு நெல்லி - அதியமான்
எட்டுத்தொகை நூல்கள்
1.நற்றிணை - அகம் பற்றி கூறும் நூல்
2.குறுந்தொகை - அகம் பற்றி கூறும் நூல்
3.ஐங்குறுநூறு - அகம் பற்றி கூறும் நூல்
4.பதிற்றுப்பத்து - புறம் பற்றி கூறும் நூல்
5.பரிபாடல் - அகம் மற்றும் புறம் ஆகிய
இரண்டையும் பற்றி கூறும் நூல்
6.கலித்தொகை - அகம் பற்றி கூறும் நூல்
7.அகநானுறு - அகம் பற்றி கூறும் நூல்
8.புறநானுறு - புறம் பற்றி கூறும் நூல்
1.நற்றிணை:
- 175 புலவர்கள்
- 400 பாடல்கள்
- 9 முதல் 12 அடிகள் வரை
- அகம் பற்றி கூறும் நூல்
- தொகுத்தவர் = தெரியவில்லை
- தொகுப்பித்தவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
- கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தெய்வம் = திருமால்
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
2.குறுந்தொகை:
- 205 புலவர்கள்
- 400 பாடல்கள்
- 4 முதல் 8 அடிகள் வரை
- அகம் பற்றி கூறும் நூல்
- தொகுத்தவர் = பூரிக்கோ
- தொகுப்பித்தவர் = தெரியவில்லை
- கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தெய்வம் = முருகன்
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
3.ஐங்குறுநூறு:
- 5 புலவர்கள்
- 500 பாடல்கள்
- 3 முதல் 6 அடிகள் வரை
- அகம் பற்றி கூறும் நூல்
- தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
- தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல்
இரும்பொறை
- கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தெய்வம் = சிவன்
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
4.பதிற்றுப்பத்து:
- 10 புலவர்கள் (தகவல் கிடைத்தது - 8 புலவர்கள்)
- 100 பாடல்கள் (தகவல் கிடைத்தது - 80 பாடல்கள்)
- 8 முதல் 57 அடிகள் வரை
- புறம் பற்றி கூறும் நூல்
- தொகுத்தவர் = தெரியவில்லை
- தொகுப்பித்தவர் = தெரியவில்லை
- கடவுள் வாழ்த்து பாடியவர் = தெரியவில்லை
- தெய்வம் = தெரியவில்லை
- திணை = பாடாண் திணை (புறத்திணை)
- பாவகை = ஆசிரியப்பா
5.பரிபாடல்:
- 13 புலவர்கள்
- 70 பாடல்கள் (தகவல் கிடைத்தது - 22 பாடல்கள்)
- 25 முதல் 400 அடிகள் வரை
- அகம் மற்றும் புறம் பற்றி கூறும் நூல்
- தொகுத்தவர் = தெரியவில்லை
- தொகுப்பித்தவர் = தெரியவில்லை
- கடவுள் வாழ்த்து பாடியவர் = தெரியவில்லை
- தெய்வம் = தெரியவில்லை
- திணை = அகமும் புறமும்
- பாவகை = பரிபாட்டு
6.கலித்தொகை:
- 5புலவர்கள்
- 150 பாடல்கள்
- 11முதல் 80 அடிகள் வரை
- அகம் பற்றி கூறும் நூல்
- தொகுத்தவர் = நல்லந்துவனார்
- தொகுப்பித்தவர் = தெரியவில்லை
- கடவுள் வாழ்த்து பாடியவர் = நல்லந்துவனார்
- தெய்வம் = சிவன்
- திணை = அகத்திணை
- பாவகை = கலிப்பா
7.அகநானுறு:
- 145 புலவர்கள்
- 400 பாடல்கள்
- 13 முதல் 31 அடிகள் வரை
- அகம் பற்றி கூறும் நூல்
- தொகுத்தவர் = உருத்திர சன்மனார்
- தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
- கடவுள் வாழ்த்து பாடியவர் =பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தெய்வம் = சிவன்
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
8.புறநானுறு:
- 158 புலவர்கள்
- 400 பாடல்கள்
- 4முதல் 40 அடிகள் வரை
- புறம்பற்றி கூறும் நூல்
- தொகுத்தவர் = தெரியவில்லை
- தொகுப்பித்தவர் = தெரியவில்லை
- கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- தெய்வம் - சிவன்
- திணை = புறத்திணை
- பாவகை = ஆசிரியப்பா