அறிவோம் சில அடிப்படை - விருதுநகர் மாவட்டம்

0

 

விருதுநகர் மாவட்டம்  


தமிழ்நாட்டின் தென்பகுதியில்,இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுஅரசு ஆணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 இல் புதிய மாவட்டமாக உருவானது“விருதுநகர் மாவட்டம்”. ஆம் கி.பி 19 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், நீதிபதிகளும் நிர்வகித்து வந்த பகுதிகள், நிர்வாக வசதிக்காக 1910 இல் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டு ஜமீன்கள் அழிக்கப்பட்டபின்பு, மீண்டும் 1985 இல் அரசு அறிவிக்கை, அரசாணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 – இன்படி இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

1.வடக்கில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள்

2.தெற்கில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்

3.கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டம்

4.மேற்கில் கேரள மாநிலம்

5.வடமேற்கில் தேனி மாவட்டம்


இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் நிர்வாகத்தலைமையிடம் விருதுநகர் நகருக்குள் அமைந்துள்ளது.

வருவாய்த்துறை:

1.வருவாய்க்கோட்டங்கள்  = 03

             (அருப்புக்கோட்டை,சிவகாசிமற்றும் சாத்தூர் ஆகியவை )

2.வட்டங்கள்   = 10

         (இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுதூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, வெம்பக்கோட்டை மற்றும் வத்திராயிருப்பு ஆகியவை)

3.குறுவட்டங்கள்   = 39

4.வருவாய் கிராமங்கள்  = 600


உள்ளாட்சி அமைப்புகள்:

1.மாநகராட்சி = 01

2.நகராட்சிகள் = 05

3.பேரூராட்சிகள் = 09


வளர்ச்சித்துறை:

1.வட்டாரங்கள் =   11

2.ஊராட்சிகள் =   450


தொகுதிகள்:

1.பாராளுமன்றம் =   01 (விருதுநகர்)

2.சட்டமன்றம் =   07   

(இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகியவை)

ஆகியவற்றைக்  கொண்டுள்ளது.

பரப்பளவு:

ஊரகம் :   3794.3 ச.கி.மீ

நகர்புறம் :   446.7 ச.கி.மீ

மொத்தம் :   4241.0 ச.கி.மீ


மக்கள் தொகை:

ஆண்கள் :   9,67,437

பெண்கள்:   9,75,872

மொத்தம் :   19,43,309


வருவாய் நிர்வாகம்:

1.சார் ஆட்சியர்/துணை ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்கும் வருவாய் நிர்வாகம் நிர்வாக வசதிக்காக மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 

2.சார் ஆட்சியர்/துணை ஆட்சியர் கோட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். 

3.நிர்வாகத்தில் கோட்டாட்சியருக்கு உறுதுணையாக வட்டாட்சியர் மட்டத்தில் ஒரு தலைமை உதவியாளர் மற்றும் பணியாளர்களும் செயல்படுகிறார்கள்.

4.ஒவ்வொரு வருவாய் கோட்டமும் ஒரு சில வட்டங்களை உள்ளடக்கி அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.

5.வருவாய் கோட்டங்கள் பல வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

6. வட்டாட்சியர் தலைமையில் ஒவ்வொரு வட்டமும் இயங்குகிறது. அவரே வட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். 

7.ஒவ்வொரு வட்டமும் பல உள் வட்டங்களாகவும், அதன் கீழ் பல வருவாய் கிராமங்களாகவும் உள்ளன. 

8.வட்ட நிர்வாகத்தில் வட்டாட்சியருக்கு  தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் உறுதுணையாக உள்ளனர்.

9.வட்டாட்சியரின் முக்கிய பணிகள் :

நிலம், சட்டம் ஒழுங்கு, தேர்தல், துயர்துடைப்பு பணிகள், நில பரிமாற்றங்கள், வரி வசூல், நில ஆக்கிரமிப்பு அகற்றம், வீட்டு மனை பட்டா வழங்கல், மற்றும் சாதி, வருவாய், இருப்பிடம்,விதவை, வாரிசு,சொத்து மதிப்பு போன்ற பல சான்றிதழ்கள் வழங்குதல். 


மாவட்ட ஆட்சியரகம்:

1.மாவட்ட ஆட்சியரகம் மாவட்ட நிர்வாகத்தில்  மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவராக இந்திய ஆட்சி பணி அதிகாரி  நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். 

2.மேலும் அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி படுத்துகிறார்.

3.இந்திய ஆட்சி பணி அதிகாரியின் பணிகள்: 

மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள்,

சட்டம் ஒழுங்கு நிர்வாகம், 

பொது தேர்தல், 

துப்பாக்கி உரிமம் 

-போன்றவை.

4.கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். 

5.கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலரின் பணிகள்:

குடிமை பொருட்கள் வழங்கல்,

நில நிர்வாகம், 

கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள்

சட்டங்கள், 

கிராம நிர்வாகம்

- போன்றவை. 


6.மேலும் ,வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.


முக்கிய  பணிகள்:

1.பிரிவு அ – பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், வருவாய் தீர்வாயம், தபால் அனுப்புதல்.

2.பிரிவு ஆ – நிலம் – பட்டா மாறுதல், நில மாற்றம், குத்தகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் நில  ஒப்படை.

3.பிரிவு இ – சட்டம் ஒழுங்கு, நீதியியல் – வழக்குகள்

4.பிரிவு ஈ – நிலம் கையகப்படுத்தல், பதிவறை பாதுகாப்பு, இரயில்வே நிலங்கள் மற்றும் பொது தேர்தல்.

5.பிரிவு உ – மாவட்ட அரசிதழ், அரசுத் தேர்வுகள், தணிக்கை தடைகள்,தகவல் அறியும் உரிமைச் சட்டம், கட்டடங்கள், நில வரி மற்றும் வீடு கட்டும் முன்பணம்.

6.பிரிவு ஊ – வரவு செலவு, ஒத்திசைவு, ஊதியம், ஊதிய நிர்ணயம், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள், மனு நீதி நாள்,முக்கிய நபர்கள் வருகை குறித்த ஏற்பாடுகள் மற்றும் வருவாய் வசூலிப்பு சட்டம்.

7.பிரிவு எ – சமூக பாதுகாப்பு திட்டங்கள், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம்.

8.பிரிவு ஏ – நில சீர்திருத்த சட்டங்கள், பூமிதான நிலங்கள் மற்றும் இயற்கை இடர்பாடுகள்.

9.பிரிவு பா – பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை.

10.பிரிவு எஸ் – குடிமை பொருட்கள் மற்றும் பொது வினியோக திட்டம்.

பிரிவு ம – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.

11.நில அளவை பிரிவு – நில அளவை.


ஊரக வளர்ச்சி:

1.திட்ட இயக்குனர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

2.நேர்முக உதவியாளர்(சத்துணவு) : பள்ளி சத்துணவு திட்டம்

3.உதவி இயக்குனர்(தணிக்கை) : தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு

4.உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) : கிராம பஞ்சாயத்துகள்


கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)