கீரைகளின் பயன்கள் சில ...

4 minute read
0

சில கீரை வகைகளின் பயன்கள்


1. பசலைகீரை:

- இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

- குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு

வியாதிகளை வர விடாமல் தடுக்கிறது.

- பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.

- இந்தக்கீரையில் பச்சையமானது அதிகமாக

உள்ளது.நம் உடலில் உள்ள கொழுப்பை

கரைக்கிறது. 

- இந்தக்கீரையை உணவில் சேர்த்து

கொள்வதால் உடல் பருமனாவதை

தவிர்க்கலாம்..

- வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.

- பசலைக் கீரை குளிர்ச்சி தன்மை கொண்டது. 


2. மணத்தக்காளி கீரை:


- தொண்டை கட்டு உள்ளவர்கள் (பாடகர்கள்,

ஆசிரியர்கள், பேச்சையே தொழிலாக

கொண்ட மேடை பேச்சாளர்கள்

  போன்றவர்கள் தொடர்ந்து அதிகம்

பேசுவதால்) மணத்தக்காளி கீரையை

பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு

வந்தால் குணமாகும்.

- வயிற்று புண்கள் உள்ளவர்கள் (காலை

உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து

சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள

உணவுகளை உண்பதாலும் வரும்

புண்கள்) மணத்தக்காளி கீரையை

குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில்

சாப்பிடுவதால் குடல், வயிற்று புண்கள்

குணமாகும்.

- மணத்தக்காளி கீரையில் அத்தியாவசிய

சத்துகளான வைட்டமின், இரும்புச் சத்து,

பாஸ்பரஸ், கால்சியம் மற்றும்

இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன.

- மணத்தக்காளி கீரையை வளரும்

குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர்,

கருவுற்றிருக்கும் பெண்கள், டுத்தர

வயதுடையவர்கள் என அனைவருக்கும்

உணவாக உள்ளது.

- மணத்தக்காளி கீரையை தினமும் உணவில்

சேர்த்துசாப்பிட்டு வருபவர்களுக்கு

சிறுநீரகங்களில் கற்கள் உயராது. சிறுநீரக

கற்கள் உள்ளவர்கள் மணத்தக்காளி

கீரையை தினமும் உணவில் சேர்த்து

சாப்பிட்டால்  சிறுநீரக கற்களைக் கரைக்கும்.

- மேலும், சிறுநீரை நன்கு பெருக்கி உடலில்

சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர்

வழியாகவே வெளியேற்றி விடும்.

- திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும்

கருத்தரிக்க முடியாத பெண்களுக்கு

வாரம் இரண்டு அல்லது மூன்று

முறையாவது மணத்தக்காளி கீரையை

பக்குவம் செய்து சாப்பிட கொடுத்து வந்தால்

அவர்களின் கருப்பை பலம் பெரும். மேலும்,

உள்ளிருக்கும் நச்சுக்கள் எல்லாம்

வெளியேறி விடும்.

- உடலுக்கு குளிர்ச்சி, வாய்ப்புண், அல்சர்

பிரச்சனைகளுக்கு சிறந்தது.

- மணத்தக்காளி இலைகளை வாயில்

வைத்து உமிழ் நீரை சிறிது நேரம் தேக்கி

வைத்தால், ஓரிரு நாளில் வாயில் உள்ள

வெள்ளை நிற சூட்டு புண் சரியாகிவிடும்.


3. பொன்னாங்கன்னி கீரை:


- பொன்னாங்கன்னியில் மூன்று வகை உண்டு…

               1. வெள்ளை (பச்சை) பொன்னாங்கன்னி கீரை

               2. சீமை (சிகப்பு) பொன்னாங்கன்னி கீரை

               3. நாட்டு பொன்னாங்கன்னி கீரை. 

  - கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

       - வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவை நீங்கும்.

  

4. தூதுவளை:


- இதன் வேறு பெயர்கள் -  தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம். 

- உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.

- ஜீரண சக்தியைத் தூண்டும்.

- தூதுவளைக் காய் - கண் நோய் நீங்கும்.

- தூதுவளைப் பூ - உடலுக்கு வலு கொடுக்கும்.

- தூதுவளை பழம் - வெயிலில் காயவைத்து

சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். 


5. சிகப்பு தண்டு கொடிபசலை:


- பசலைக்கீரையில் கொடி வகையில் சிகப்பு, பச்சை என

இரண்டு ரகங்கள் உள்ளது.

- கப்பு தண்டு கொடிபசலை கீரை சிகப்பு நிறத்தில் தண்டு

இலை இதய வடிவில் காணப்படும்.

- ஆண்கள் கொடி பசலைக் கீரைச் சாறு எடுத்து சாப்பிட்டு

வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை

அதிகரிக்கும்.


6. பிரண்டை:


- இதில் பட்டை,உருட்டு,ஓலை,சதுரம் என வகைகள் உண்டு. 

- கால்சியம் சத்து அதிகம் நிறைந்தது.

- எலும்பு பலவீனத்தை போக்குகிறது.


7. முள்ளங்கி கீரை:


- நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

- மலச்சிக்கலைக் குணப்படுத்தும். 

- கல்லீரலில் உண்டாகும் பலவிதமான கோளாறுகளை

குணப்படுத்தும்.

-  இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு,இதய

பலவீனம் உடையவர்கள் இருதயத்திற்கு பலம் சேர்க்கும்.

- சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்.

- சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். 

- சிறுநீர் கல்லடைப்பு,கரப்பான் என்ற தோல் வியாதிகளையும்

குணமாக்கும்.


8. லச்லக்கெட்டை கீரை:


 - இது மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகும்.

  

9. முளைக்கீரை:



- முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது.

மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது.


10. பச்சை கொடிபசலை:




  - உடல் தாகத்தை, உடல் வெப்பத்தையும் தணிக்கும். 

- குடலில் ஊறு செய்யும் மலத்தை வெளித் தள்ளும்.


11. பருப்புகீரை:


- பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச்

செய்வது.

- உடல் சூடு தணியும், மலச்சிக்கல் நீங்கும்.

- வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற் கீரை இது. 

- கல்லீரல் நோய்கள் தீரும்.

- இவை நுரையீரல் பாதிப்புகளில்  இருந்து காக்கக்கூடியவை.

- மலச்சிக்கலைப் போக்குகிறது, குடற்புழுக்களை

அகற்றுகிறது. 

- வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போகும்.


12. அம்மான் பச்சரிசி:


- வாய்ப்புண், வயிற்றுப்புண்  நீங்கும்.

- குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

- மலச்சிக்கல் நீங்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.

- அம்மான் பச்சரிசி இலையை அரைத்து கொப்புளங்கள் மீது

பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள்  குணமாகும்.

- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும் .

- அம்மான் பச்சரிசி பால் - மரு உதிர்ந்துவிடும்.

13. பாலக்கீரை:

  - நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 

 - புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது.

 - ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்கிறது.

 - ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.

 - புரத சத்து நிறைந்துள்ளது.

 - மாரடைப்பு,ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய

நோய்கள் வராமல் தடுக்கிறது.


14. முடக்கத்தான் கீரை:


- மலச்சிக்கல், மூல நோய் போன்ற நோய்கள்

குணமாகின்றன.

- காது வலி நீங்கும். 

- பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம் நீங்கும். 


15. அகத்தி கீரை:


-  உடலில் இயற்கையாக இல்லாத எல்லா கழிவு 

  பொருட்களையும் வெளியேற்றும் தன்மை கொண்டது.

- இதில் 63 விதமான சத்துக்கள் உள்ளன.


16. குப்பைமேனி கீரை:


- தோல் நோய்கள் குணமாகும். 

- முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைந்து முகம்

பளபளப்பாக மாறும்.

- அழகும், ஆரோக்கியமும்உண்டாகும்.


17. துத்தி கீரை:


- குடல் புண்களை ஆற்றுகிறது. 

- பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

- பல சித்த மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

- படர்தாமரை நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது.

- வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

- மூலநோய் குணமாகும்.


18. தவசிகீரை:

- வைட்டமின் எ, வைட்டமின் பி , வைட்டமின் சி,வைட்டமின்

கே போன்றவை அடங்கி உள்ளன.

- ரத்தத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.

- பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும்.


19. கருவேப்பிலை:


- இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.

- வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு

உதவுகிறது.

- சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

- கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.

- கல்லீரலைப் பாதுகாக்கிறது.

- கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது. 

- முடியை வலுவாக்குகிறது.

- நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது.

- செரிமான மண்டலத்திற்கு நல்லது.


20. கல்யாண முருங்கை:


- கர்ப்பபை பிரச்சனைகளை சரி செய்கிறது.

- கருச்சிதைவிலிருந்து சிசுவைக் காக்கிறது.

- பெண் மலட்டுத் தன்மையை நீக்குகிறது.

- பருத்த உடல் இளைக்கும்.

- உடலை வலுவாக்கும்.

- ஆண்மை பெருகும்.